பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-02-25 11:08 GMT

கரூர் மாவட்டம் மணவாடி பஸ் நிறுத்தத்தில் மணவாடி, அய்யம்பாளையம் ,கத்தாளப்பட்டி,பெரியார் நகர், செல்லிபாளையம், சின்னதம்பிபாளையம். மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிக அளவில் வந்து கரூர் மற்றும் திண்டுக்கல் மார்க்கத்தில் பஸ் ஏறி செல்கின்றனர். அவர்கள் பஸ் ஏறி செல்வதற்காக சில வேலைகளில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.அவ்வாறு காத்திருக்கும் போது அந்த பகுதியில் அமர்வதற்கு வசதி எதுவும் இல்லை. ஏற்கனவே இந்த பகுதியில் கட்டப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை சாலை விரிவாக்கத்தின் போது இடித்த அகற்றப்பட்டு விட்டது. தற்போது நிழற்குடை வசதி இல்லாததால் வெயில் மற்றும் மழை காலங்களில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மணவாடி பஸ் நிறுத்த பகுதியில் பயணியர் நிழற்குடை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்