போக்குவரத்து நெரிசல்

Update: 2024-02-18 17:20 GMT

நாமக்கல் கோட்டை சாலையில் நரசிம்மசாமி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளிக்கு செல்லும் நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரங்களில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்