பஸ் நிலையத்திற்குள் அத்துமீறும் வாகனங்கள்

Update: 2024-02-04 16:39 GMT

பஸ் நிலையத்திற்குள் அத்துமீறும் வாகனங்கள்

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களிலும் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும். இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே அத்துமீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை, நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் திங்கட்கிழமைகளில் பஸ் நிலையத்திற்குள், சரக்கு வாகனங்களை அனுமதிப்பதை தடுக்க வேண்டும்.

கார்த்திகேயன்,பல்லடம்.

98878 46383

மேலும் செய்திகள்