பஸ் வசதி தேவை

Update: 2024-02-04 16:19 GMT
மதுரை  ஆனையூர் மற்றும்  இந்திராநகர் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.. இந்த பகுதி மாநகராட்சியாக மாறிய பின்பும் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், திருப்பரங்குன்றம் போன்ற முக்கிய பகுதிகளுக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள்,  வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் ஆட்டோக்களில்  அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த பகுதிகளுக்கு முறையாக அரசு பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்