விபத்து அபாயம்

Update: 2024-02-04 12:51 GMT

நாமக்கல், கரூர், குளித்தலை, மணப்பாறை, துறையூர், பெரம்பலூர் உள்ளிட்ட நகராட்சிகளில் இருந்து அரியலூர் சிமெண்டு தொழிற்சாலைக்கு மக்கா குப்பைகள் ஏறியூட்டுவதற்காக தினமும் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் குப்பைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடாமல் சாக்கு மற்றும் பிளாஸ்டிக் விரிப்புகள் கொண்டு மூடி வருகின்றனர். அந்த வாகனம் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் குப்பைகளை கொட்டிய வண்ணம் லாரிகள் செல்கிறது. லாரிகளில் இருந்து கொட்டும் குப்பைகள் பின்னால் வரும் வாகனத்திலும், மோட்டார் சைக்கிள் வருபவர் முகத்திலும் கொட்டுகின்றன. இதனால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்