வாகன ஓட்டிகள் அவதி

Update: 2024-02-04 12:49 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். அந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆட்டு குட்டிகள் அரியலூர் -பெரம்பலூர் சாலையில் சில நேரங்கள் துள்ளி குதித்து விளையாடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்