பஸ் நேரத்தை மாற்ற கோரிக்கை

Update: 2024-01-28 12:57 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள தொண்டைமான்ஊரணி, மீனம்பட்டி, கணபதிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கந்தர்வக்கோட்டையில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஆலங்குடியிலிருந்து தொண்டைமான்ஊரணி வழியாக காலை 6.50 மணியளவில் நகர பஸ் கந்தர்வக்கோட்டைக்கு செல்கின்றது. அந்த பஸ்சில் செல்லும் மாணவர்கள் பள்ளி, கல்லூரி திறப்பதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்னதாகவே பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. தொண்டைமான்ஊரணி சுற்றுவட்டார கிராமப்பகுதி மாணவர்களின் நலன் கருதி காலை 8.30 மணியளவில் கந்தர்வக்கோட்டையிலிருந்து தொண்டைமான்ஊரணிக்கு நகர பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்