ஆபத்தான நிழற்குடை

Update: 2024-01-14 13:19 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி மேற்கு தெருவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பிரதான சாலையில் இருந்து இந்த தெருவுக்கு செல்லும் சாலை அருகே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. இது தற்போது சிதிலமடைந்து, சுவர்கள் இடிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த நிழற்குடையை பயன் படுத்த முடிவதில்லை. வெட்டவெளியில் நின்று பஸ் ஏறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்