நடைபாதை அமைக்கப்படுமா?

Update: 2024-01-14 07:45 GMT

 நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். ஆனால், இந்த சாலையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை முறையாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலையோரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள் வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதசாரிகள் நலன்கருதி சாலையோர மழைநீர் ஓடையின் மீது சிமெண்டு சிலாப்புகள் போட்டு நடைபாதை அமைப்பார்களா?.

மேலும் செய்திகள்