போக்குவரத்து நெரிசல்

Update: 2024-01-07 17:18 GMT

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து செல்கிறார்கள். இவர்கள் தாங்கள் வரும் கார்களை 4 ரத வீதிகளில் சாலையோரமாக இருபுறமும் நிறுத்தி செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே 4 சக்கர வாகனங்களை முறையாக பார்க்கிங் செய்து விட்டு கோவிலுக்கு செல்ல போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்