விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2023-12-17 10:52 GMT

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா மலைக்குடிப்பட்டி கள்ளியடக்கன்பட்டி பிரிவு சாலை திருப்பத்தில் ஆள் உயரத்திற்கு மேல் ஆமணக்கு செடிகள் அதிக அளவில் முளைத்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் திரும்பும்போது எதிர் திசையில் வரும் வாகனங்கள் தெரியாமல் உள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்