ஆப்பக்கூடலில் இருந்து அந்தியூர் வழியாக டி.என்.பாளையத்துக்கு சென்று வர பஸ் வசதி இல்லை. இதனால் இந்த வழியாக பயணம் செய்பவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே டி.என்.பாளையத்தில் இருந்து அந்தியூர் வழியாக ஆப்பக்கூடல் செல்வதற்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி செய்துதர சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.