பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள்

Update: 2023-12-10 14:32 GMT

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் பகுதியில் உள்ள பிள்ளையார் பஸ் நிறுத்தம், கடைவீதி பஸ் நிறுத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பஸ் நிறுத்தங்களை பயணிகள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை தொடர்கதையாகி வருகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி உரிய ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்