பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-12-10 13:11 GMT

கரூர் மாவட்டம், காதப்பாறை ஊராட்சி, வெண்ணெய்மலை மெயின் சாலையில், சாலைகள் அகலப்படுத்தும் பணி நடந்தது. அப்போது இப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இங்கு நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி