பழுதடைந்த பயணிகள் நிழலகம்

Update: 2023-12-03 13:00 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாஞ்சியார்கோவில் பகுதியில் உள்ள பயணிகள் நிழலகம் பராமரிப்பின்றி இருக்கிறது. இதனால் பயணிகள் நிழலகத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், பயணிகள் நிழலகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தரைத்தளம் பெயர்ந்து மழைநீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் நிழலகத்தை பொதுமக்கள் சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்