கால்நடைகளால் விபத்து

Update: 2023-12-03 11:46 GMT

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் சிக்கும் சிலர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்