வழி காட்டாத ஊர் பெயர் பலகை

Update: 2023-11-26 11:49 GMT

வழி காட்டாத ஊர் பெயர் பலகை

பல்லடத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டிப்பலகை கடந்த 6 மாதமாக எந்தவித அறிவிப்பு வாசகமும் இல்லாமல் வெறுமனே இருந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது உள்ள நவீன காலத்தில் செல்போனில் எல்லாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றாலும், சாலை ஓரத்தில் வைக்கப்பட்டு உள்ள இதுபோன்ற வழிகாட்டி பலகைகளால் வாகன ஓட்டிகளுக்கு பயனாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் வழிகாட்டிப் பலகையில் ஊர்கள் பெயர்களுடன் வழிகாட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ரவி,பல்லடம்.

98348 73663

-------------------

மேலும் செய்திகள்