ஆபத்தான பயணம்

Update: 2023-11-19 14:03 GMT

பெரம்பலூர் நகருக்கு ஆய்க்குடி கிராமத்திலிருந்தும், எழுமூர் கிராமத்திலிருந்தும் செங்குணம் கிராமம் வழியாக நாள் தோறும் காலை சுமார் 8.15 முதல் 8.30 மணியளவில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் பள்ளி, கல்லூரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ மாணவர்கள், பெண்கள் உட்பட பயணிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு கூட்ட நெரிசலோடு செல்கின்றன. மாணவர்கள் பலரும் ஆபத்தான நிலையில் பஸ் படியில் பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே 2022-23 ஆம் கல்வி ஆண்டில் கோடை விடுமுறைக்கு முன் மாணவர்கள் நலன்கள் கருதி செங்குணம் கிராமத்திற்கென ஏற்கனவே இயக்கப்பட்ட சிறப்பு பஸ் மீண்டும் இயக்கப்பட மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்