போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-11-05 12:20 GMT

நாமக்கல் பஸ்நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் பஸ்நிலையத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் பஸ்நிலையத்தின் உட்புறத்தில் பஸ்கள் நிற்கும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. எனவே பஸ்நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்