சேதமடைந்த நிழற்குடை

Update: 2023-10-29 14:55 GMT

திருவள்ளூர் மாவட்டம், பாடிய நல்லூர் சோழவரம் ஒன்றியம், திருவள்ளூர் கூட்டுச்சாலையில் அமைந்துள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால், பயணிகள் நிழற்குடையின் மேற்வரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மழைக்காலங்களில் பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. இதன்காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்துக்குளளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்