போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-29 14:35 GMT

தர்மபுரி நகரில் டவுன் மற்றும் புறநகர் பஸ் நிலையம் அருகருகே செயல்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையங்களுக்கு தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையங்களில் நுழைவுவாயில் பகுதி மற்றும் பஸ்கள் வெளியே செல்லும் பகுதிகளின் அருகே இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்