போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-10-22 09:19 GMT

சூலூர் பஸ் நிலையத்துக்குள் அரசு டவுன் பஸ்களை தவிர தனியார் பஸ்கள் வருவது இல்லை. அவை பஸ் நிலையத்துக்கு வெளியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. மேலும் பயணிகளும் பஸ் நிலையத்துக்கு வெளியே நின்று அந்த பஸ்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அனைத்து தனியார் பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்