பயணிகள் அவதி

Update: 2023-10-22 08:44 GMT

கன்னியாகுமரியில் இருந்து தேங்காப்பட்டணத்திற்கு தடம் எண் 307 ‘சி’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் அந்த பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடைந்து வந்தனர். தற்போது சில வாரங்களாக இந்த பஸ் சீராக இயக்கப்படுவதில்லை. இதனால், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள், மாணவ-மாணவிகள் நலன்கருதி மீண்டும் அரசு பஸ்சை சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்