பராமரிப்பில்லாத பயணிகள் நிழற்குடை

Update: 2023-10-15 14:47 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மைனர் பங்களா பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பயணிகள் நிழற்குடையின் மேற்வரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், மழைக்காலங்களில் பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர் புகுந்துவிடுகிறது. இதன்காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்துக்குளளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்