பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2023-10-15 14:46 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பள்ளத்தூர் பஸ் நிறுத்த பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பஸ் நிறுத்தப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்