ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-10-08 14:12 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, கள்ளிக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலம்பட்டி சாலையின் இருபுறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாலை குறுகிய அளவில் காணப்படுவதினால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் சாலையை ஒட்டியவாறு சிமெண்டு தரைகள் அமைத்து உள்ளதால் இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்