வழித்தடம் மாறும் பஸ்களால் பயணிகள் அவதி

Update: 2023-10-08 07:39 GMT

தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், குலசேகரபட்டி வழியாக பாவூர்சத்திரத்துக்கு இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் (வழித்தட எண்: 24ஏ, 24சி) அடிக்கடி மேலப்பாவூருடன் நின்று விடுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பஸ்களை உரிய வழித்தடத்தில் முறையாக இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்