போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-10-04 17:44 GMT

தர்மபுரி கடைவீதி பகுதியில் சாலைகளில் காலை முதல் இரவு வரை போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலைகளில் காலை நேரத்தில் சரக்கு வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கி வருகிறார்கள். இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி சாலையில் தேங்கி நின்று வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சரக்கு வாகனங்களை நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

-முருகேசன், தர்மபுரி.

மேலும் செய்திகள்