போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-10-04 15:26 GMT

பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் பஞ்சாயத்து சாலடியூரில் புதிய சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலையில் இருந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பியை மாற்றி அமைக்காமல், அதைச் சுற்றிலும் சாலை அமைத்தனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே மின்கம்பத்தின் தாங்கு கம்பியை சாலையோரமாக மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்