விதிமீறலால் விபத்து அபாயம்

Update: 2023-10-01 15:31 GMT
பழனி பஸ்நிலைய கிழக்கு நுழைவு வாயில் வழியாக பஸ்கள் உள்ளே செல்ல மட்டும் அனுமதி உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை செல்லும் பஸ்கள் கிழக்கு நுழைவாயில் வழியே வெளியேறுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்தும் நடந்து வருகிறது. இதை தடுக்க நகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்