நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-09-27 14:20 GMT

சுரண்டை அருகே சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். சங்கரன்கோவிலில் இருந்து சேர்ந்தமரம் வழியாக தென்காசிக்கு (வழித்தட எண்:-160) செல்லும் பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் சேர்ந்தமரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு சென்று வந்தனர். இந்த பஸ் கடந்த சில நாட்களாக மாலையில் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்