நடைபாதை வேண்டும்

Update: 2023-09-24 12:39 GMT

சூலூர் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் மேல் மூடி இல்லை. இங்குள்ள சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதால், சில நேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாக்கடை கால்வாயின் மீது மூடி அமைத்து நடைபாதையாக மாற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்