அரசு பஸ்சை தொடர்ந்து இயக்க வேண்டும்

Update: 2023-02-19 17:02 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா முனியம்பட்டி, பாட்டையூர், சீலேரி வழியாக தடம் எண்:8பி என்ற அரசு பஸ் ஏரிப்புத்தூர் வரை மதியம் 12 மணி, மாலை 5 மணிக்கு இயக்கப்படுவது இல்லை. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. சிறிது நாட்கள் மட்டும் இயக்கி விட்டு மீண்டும் இயக்காமல் விட்டு விடுகின்றனர். அந்த பஸ் அனைத்து தடவைகளும் மேற்கண்ட வழியில் இயக்கப்பட வேண்டும். அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கே.திருநாவுக்கரசு, முனியம்பட்டி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி