ஆபத்தான பயணம்

Update: 2022-09-02 16:04 GMT

திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் வேலைக்கு செல்லும் பெண்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அதிகமாக பயணம் செய்கிறார்கள். இலவச பயணம் மேற்கொள்ளும் அவர்களுக்கு வேறு பஸ் இல்லை. எனவே ஓரே நேரத்தில் அனைவரும் ஏறுகின்றனர். இதனால் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாகி பள்ளி மாணவர்கள் படியில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காலை, மாலை என இரு வேளையில் கூடுதல் டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சனாவுல்லாஹ், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி