சென்னை, பெங்களூரு பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் வந்துசெல்ல வேண்டும்

Update: 2022-09-15 09:43 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் சென்னை, பெங்களூரு அரசு பஸ்கள் வருவது இல்லை. மழைக்காலங்களிலும், இரவிலும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் தான் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. சென்னை, பெங்களூரு அரசு பஸ்கள் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் வந்துசெல்ல வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.அருள், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்

பஸ் வசதி