பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

Update: 2022-08-31 16:10 GMT


வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் இருந்து கண்ணமங்கலம் செல்லும் சாலையில், கணவாய் பகுதியில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்கின்றனர். குடியிருப்புகள் இல்லாத பகுதியில் வேளாண்மை அலுவலகம் அமைந்துள்ளதால், இங்கு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் கணியம்பாடியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி அனைத்து பஸ்களும் வேளாண்மை அலுவலகத்தில் நின்று செல்ல வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி