பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் வந்து செல்ல வேண்டும்

Update: 2023-02-26 16:32 GMT

காவேரிப்பாக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணி தொடங்கியதால், பஸ் நிலையத்துக்கு வரும் வழி துண்டிக்கப்பட்டது. இதனால் பஸ்கள் வெளியே நின்று சென்றன. சாலை பணி முடிந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால் பஸ்கள் உள்ளே வரவில்லை. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கு.சபரிஷ், காவேரிப்பாக்கம். 

மேலும் செய்திகள்