பஸ் நிலையத்துக்குள் வராத பஸ்கள்

Update: 2023-09-03 17:34 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்வது இல்லை. அனைத்துப் பஸ்களும் பைபாஸ் சாலையிலேயே சென்று விடுகின்றன. ஒருசில பஸ்கள் மேம்பாலத்திலேயே பயணிகளை இறக்கி விடுகின்றன. மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்க பயணிகளுக்கு சிரமமாக உள்ளது. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து பஸ்களும் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்துக்குள் வந்து செல்ல உத்தரவிட வேண்டும்.

-சம்பத், ஓய்வுபெற்ற ஆசிரியர், நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்