ஆபத்தான நிழற்குடை
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் விருமாண்டம்பாளையம் பஞ்சாயத்து அம்மாபாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர பஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இங்குள்ள பஸ்நிறுத்தம் இருக்கை வசதி இன்றியும், கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்தும் மிகவும் ஆபத்தான நிலையிலும் உள்ளது. இதனால் பயணிகள் அங்கு பஸ்சுக்காக காத்திருக்க முடியாத நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பாக அந்த பஸ் நிறுத்தத்தை இடித்துவிட்டு புதிய பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
மூர்த்தி, அம்மாபாளையம். 93847 20395: