காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே பஸ் சேவை

Update: 2026-06-07 11:25 GMT

காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அதன் மூலம் நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், வேலைக்கு செல்வோர் என பலரும் பயன் அடைந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காட்பாடி ரெயில் நிலையம் உள்ளே அரசு டவுன் பஸ்கள் வருவதில்லை. இதனால் வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் 150-200 மீட்டர் தூரம் வரை மேடான சாலையில் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது. முன்பு இருந்தது போலவே அரசு டவுன் பஸ்கள் ரெயில் நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வி.குமார், காட்பாடி.  

மேலும் செய்திகள்