பஸ்களால் போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-07 16:41 GMT

வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அதன் கிளை மருத்துவமனைக்கு நோயாளிகள், ஊழியர்களை பஸ்களில் காலை முதல் மாலை வரை பலமுறை அழைத்துச் செல்கிறார்கள். அந்தப் பஸ்களை சாலையில் நிற்க வைப்பதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள், வேலைக்கு செல்வோர் சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் கால தாமதம் ஆகிறது. அதேபோல் காகிதப்பட்டறை வழியாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பகுதியில் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலை பணிகள் முடியும் வரை அந்தப் பஸ்களை மாற்றுப்பாதையில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அருண்குமார், ரங்காபுரம்.

மேலும் செய்திகள்

பஸ்வசதி