பஸ் நிலையத்தில் துர்நாற்றம்

Update: 2022-10-19 11:19 GMT

திருவண்ணாமலைக்கு வந்து செல்லும் பயணிகள், கிரிவலத்துக்கு வரும் பக்தர்கள் மத்திய பஸ் நிலையத்தில் சுகாதார வளாகத்துக்கு செல்லாமல் பஸ்கள் நிற்கும் பின்னாலும், மறைவான இடத்திலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் மத்திய பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. பொதுச் சுகாதார நிலையமும் முறையாக பராமரிக்கவில்லை. சுகாதார வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மேலும் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு எச்சரிக்கை பலகை வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமஜெயம், திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்