அந்தியூரில் இருந்து நகலூர், அத்தாணி, கணக்கம்பாளையம் வழியாக கோபி செல்வதற்கு ஏ20 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கொரோனா 2-ம் அலைக்கு பிறகு மற்ற பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏ20 என்ற டவுன் பஸ் மட்டும் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்கள், பயணிகள், கூலி வேலைக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். உடனே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.