மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி நேரங்களில் பிரதான சாலைகளில் அதிக அளவு கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி நேரங்களில் நகர் பகுதிக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடை செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காமராஜ் -சீர்காழி