மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பஸ்நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகிறது. இதன்காரணமாக பஸ்களை திருப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பஸ் டிரைவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்துக்குள் போக்குவரத்துக்கு இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?