விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு இரவு நேரங்களில் குறிப்பிட்ட அளவு தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் இரவு நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.