பழுதடைந்த பஸ்சால் பயணிகள் அவதி

Update: 2022-09-14 12:43 GMT
திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சில பஸ்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று காலையில் இயக்கப்பட்ட பஸ்சில் பிரேக் பழுது ஏற்பட்டதால், பஸ்சை ஆமை வேகத்தில் டிரைவர் சாமர்த்தியமாக பயணிகளுடன் ஓட்டி வந்தார். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணித்ததுடன் தாமதமாக சென்றதால் அவதியடைந்தனர். எனவே, பழுதடைந்த பஸ்களை உடனுக்குடன் சரி செய்வதுடன், புதிய பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி