திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் நிலையத்திற்குள் திருச்சி, பெரம்பலூர், கரூர், நாமக்கல் போன்ற வழித்தடங்களிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலைய வளாகம் மற்றும் கட்டண கழிப்பறை ஆகியவை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும் பஸ் வளாகத்தில் பயணிகள் நிற்க சிரமப்படும் அளவிற்கு தரைக்கடை வியாபாரிகளும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.