அரசு டவுன் பஸ்கள் இயக்க கோரிக்கை

Update: 2022-08-20 13:26 GMT

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் வரை நிறைய ஊர்கள் உள்ளன. இந்த ஊர்களில் இருந்து பல்வேறு பணிகளுக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் புன்னம் சத்திரம் பகுதிக்கும், வேலாயுதம்பாளையம் பகுதிக்கும் இருசக்கர வாகனத்திலும் ,கூலித் தொழிலாளிகள் நடந்து சென்று பஸ்கள் ஏறி சென்று வருகின்றனர். இந்த வழியாக குறிப்பிட்ட ஒரு முறை மட்டும் அரசு டவுன் பஸ் சென்று வருகிறது. இதனால் கரூர்- ஈரோடு நெடுஞ்சாலை பகுதிக்கும், பரமத்தி வேலூர், கொடுமுடி, ஈரோடு, கோவை செல்லும் பகுதிக்கும் பஸ்கள் செல்ல அதியமான் கோட்டை, மசக்கவுண்டன்புதூர், மூலமங்கலம் , புது குறுக்குபாளையம்,புகழூர் ரெயில் நிலையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றும், நடந்து சென்றும் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். எனவே புன்னம் சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் அரசு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்