அந்தியூரில் இருந்து கற்கை கண்டிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது. இது 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தவறி ரோட்டோர பள்ளத்தில் விழ வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதற்கு ரோட்டின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.